ஜெயம் ரவி நடிக்கும் நிமிர்ந்து நில் படத்தின் கதை இது தானாம்...!
அநாதை சிறுவனான ஜெயம் ரவி ஆசிரமம் போன்ற ஒரு பள்ளியில் படிக்கிறார். நல்லதை மட்டுமே போதிக்கும் அந்தப் பள்ளியில், கல்லூரியில் படித்து முடித்து விட்டு 100 சதவிகிதம் நல்லவனாக வெளியே வருகிறார். பொய் சொல்வோ, தப்பு செய்யவோ அவருக்குத் தெரியாது. ஆனால் வெளி உலகம் இந்த இரண்டும் நிறைந்ததாக இருக்கிறது. அவரால் ஒரு நிமிடம்கூட நல்லவனாக வாழ முடியவில்லை. வாழ விடவில்லை சமூகம். இதனால் அவருக்கு பல துன்பங்கள் வந்து சேர்கிறது. மற்ற படத்தில் ஹீரோ வெகுண்டெழுந்து துன்பத்துக்கு காரணமானவர்களை போட்டு தள்ளிவிட்டு போய்கிட்டே இருப்பான். இதில் அப்படி இல்லை. ஹீரோ நல்லவனாகவே இருந்து நல்லதே செய்து மற்றவர்களை திருத்துவார். அது எப்படி என்பதுதான் திரைக்கதை. வன்முறை, சண்டை, ரத்தம் இல்லாத ஆக்ஷன் படமாக உருவாகிறது நிமிர்ந்து நில். சமுத்திரகனி நான்கு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய திரைக்கதையாம். இது அவரது கனவு படம்.
ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தின் கதை!
படத்தின் கதை குறித்து இயக்குனர் சமுத்திரகனி கூறுகையில் "ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும் என்பது ஒன்லைன்," என்றார்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ நானி. ஹீரோயின்கள் மாற்றமில்லை என்பது கூடுதல் தகவலாகும்.
No comments:
Post a Comment