Online jobs

Tuesday, 18 March 2014

சினிமாவே பிடிக்கவில்லை - சிம்பு விரக்தி

சினிமாவே பிடிக்கவில்லை - சிம்பு விரக்தி

3
I didnt like cinema says Simbu
சினிமாவில் நடிக்கவே பிடிக்கவில்லை என்று நடிகர் சிம்பு விரக்தியாக கூறியுள்ளார். சின்ன வயதிலேயே நடிக்க தொடங்கிய சிம்பு. அப்போதே தன் பெயருக்கு முன் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொண்டார், அதுமட்டுமின்றி அப்போதே, ''ஐ-யம் லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...'' என்று பாட்டெல்லாம் பாடினார். பின்னர் 'காதல் அழிவதில்லை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். அதேசமயம் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் காதல் வயப்பட்டு பின்னர் அந்த காதலை முறித்தும் கொண்டார். தற்போது வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு, சட்டென்று மாறுது வானிலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிம்பு, தனக்கு சினிமாவில் நடிக்க பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன், அதனால் சினிமாவில் எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். நல்லது, கெட்டது எது என்று உடனே கூறிவிடுவேன். சின்ன வயது முதலே, ரஜினி சார் மாதிரி சூப்பர் ஸ்டாராக ஆக வேண்டும் என்பது தான் எனது கனவாக இருந்தது. ஆனால் வயது உயர உயர வாழ்க்கை, வேறு மாதிரி சென்று விடுகிறது. தற்போது சினிமாவே எனக்கு பிடிக்கவில்லை. சினிமா எனும் வட்டத்திற்குள் சிக்கி விடாமல், சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்யலாமா என்று எண்ண தோன்றுகிறது. எனக்குள் இருந்த சூப்பர் ஸ்டார் ஆகும் எண்ணமும் போய்விட்டது. மேலும் சினிமா மட்டுமின்றி பணத்தை கண்டாலும் பிடிக்கவில்லை. பணம், ஒருவனை நல்லவனாகவும் ஆக்குகிறது, கெட்டவனாகவும் மாற்றுகிறது, பொறாமையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். 

சிம்பு இப்படி விரக்தியாக என்ன காரணமோ...?!!

No comments:

Post a Comment