கோலிசோடா லாபத்தில் ரெட் ஒன் கேமரா வாங்கிய விஜய்மில்டன்!
இந்த வருடம் வெளியான படங்களில் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்த படம் - கோலிசோடா படம் மட்டுமே. அஜித்தின் வீரம், விஜய் நடித்த ஜில்லா உட்பட அத்தனை படங்களுமே கையைக் கடிக்காத அளவுக்கு லாபம் தந்த படங்கள்தானே தவிர, பெரிய லாபத்தைத் தந்த படங்கள் அல்ல.
கோலிசோடா படத்தை வாங்கிய அனைத்து விநியோகதர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கொழுத்த லாபம் கிடைத்தாலும், அப்படத்தைத் தயாரித்து இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனுக்கு பெரிதாக லாபம் கிடைக்கவில்லை. கோலிசோடா படத்தை பாண்டிராஜ தயாரிப்பதாக இருந்து பிறகு அவர் பின்வாங்கியதால், வேறு வழியில்லாமல் தானே தயாரிக்கும்நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜய்மில்டன்.
சினிமாவில் பெரிய பின்புலம் இல்லாததினால், நண்பர்கள் வட்டாரத்தில் கடன் வாங்கித்தான் கோலிசோடாவை தயாரித்தார் விஜய்மில்டன். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும், முதலீடு செய்த பணமும் சின்ன லாபமும் மட்டுமே மில்டனுக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த பணத்தில் கடன் கொடுத்ததுபோக, எஞ்சிய பணத்தில் 48 லட்சத்துக்கு ரெட் ஒன் டிஜிட்டல் கேமரா ஒன்று வாங்கியிருக்கிறார் விஜய்மில்டன்.
No comments:
Post a Comment